செய்திகள்

தூத்துக்குடியில் கார் டிரைவர் தற்கொலை

Published On 2019-01-19 11:52 GMT   |   Update On 2019-01-19 11:52 GMT
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் மேலஅலங்காரத்தட்டை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 27). கார் டிரைவர். இவரது மனைவி பகவதி (24). இவர்களுக்கு திருமணமாகி 4 மாத குழந்தை உள்ளது. யோகராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். 

நேற்று இரவு கணவன்-மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த யோகராஜ் இன்று அதிகாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News