செய்திகள்
ஜல்லிக்கட்டை காண திரண்ட பொதுமக்கள்

ஈரோடு ஜல்லிக்கட்டில் 11 காளைகளை அடக்கிய கல்லூரி மாணவர் சாம்பியன்

Published On 2019-01-19 11:06 GMT   |   Update On 2019-01-19 11:52 GMT
ஈரோடு ஜல்லிக்கட்டில் மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற பி.காம். 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர் கார்த்திக் கலந்து கொண்ட அவர் மட்டும் தனியாக 11 காளைகளை அடக்கி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
ஈரோடு:

ஈரோட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 150 மாடுகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன.

இதை அடக்க 200 இளைஞர்களள் மல்லு கட்டினர். மாடுகளை அடக்கியவர்களுக்கு தங்க காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஈரோடு ஜல்லிக்கட்டில் மதுரையை சோ்ந்த பி.காம். 3-ம் ஆண்டு கல்லூரி மாணவா் கார்த்திக் என்பவர் கலந்து கொண்டார். அவர் மட்டும் தனியாக 11 காளைகளை அடக்கி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

இவருக்கு 11 தங்க காசுகளும் மற்றும் மொபைல் உள்பட பல்வேறு பரிகளும் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரருக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

மாணவர் கார்த்திக் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறதோ... அங்கெல்லாம் சென்று ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Jallikattu
Tags:    

Similar News