செய்திகள்

சிங்காநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற முதியவர் கைது

Published On 2019-01-19 09:30 GMT   |   Update On 2019-01-19 09:30 GMT
சிங்காநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்காநல்லூர்:

சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் இருகூர் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஆன்லைன் லாட்டரிகள் விற்றதாக அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் (60) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து லாட்டரி நம்பர்கள் எழுதப்பட்டிருந்த 3 அட்டைகள் மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல சப்-இன்ஸ்பெக்டர் போஸ் ராவத்தூர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக சிங்காநல்லூரை சார்ந்த பால சுப்பிரமணியன் (57) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 45 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.950-ஐ பறிமுதல் செய்தார்.

Tags:    

Similar News