செய்திகள்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2019-01-19 09:01 GMT   |   Update On 2019-01-19 09:01 GMT
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை அருகே உள்ள நா.வல்லுண்டாம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார் .

தஞ்சை அருகே கொல்லான்கரை-வடக்குப்பட்டு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் சூர்யா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News