செய்திகள்

மயிலாடி அருகே விபத்து: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்- வாலிபர் பலி

Published On 2019-01-14 11:41 GMT   |   Update On 2019-01-14 11:41 GMT
மயிலாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மற்றும் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி மார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டுசாமி. இவரது மகன் சாய்ஹரிகரன் (வயது 22). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் அவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று இரவு சாய் ஹரிகரனும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் முத்துராஜ் (20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் புறப்பட்டுச் சென்றனர்.

இரவு 10 மணி அளவில் அவர்கள் மயிலாடியை கடந்து சிறிது தூரம் வந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து பெருமணல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாய்ஹரிகரனும், முத்துராஜூம் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த சாய்ஹரிகரனை அந்த பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் ஜெகதீஷ் (30) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர் பொன்மனை பகுதியைச் சேர்ந்தவர். விபத்தில் பலியான முத்து ராஜ், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆவார்.

நாகர்கோவிலில் நடந்த மற்றொரு விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். இளங்கடை பாவாகாசீம் நகரைச் சேர்ந்தவர் பீர்முகம்மது (82). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து மருந்து வாங்குவதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பறக்கை நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பீர்முகம்மது பலியானார்.

Tags:    

Similar News