செய்திகள்

பொள்ளாச்சி அருகே விபத்தில் பெயிண்டர் பலி

Published On 2019-01-14 10:06 GMT   |   Update On 2019-01-14 10:06 GMT
பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம் பாளையம் அழகப்பா காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார் (32). பெயிண்டர். நேற்று மாலை இவர் தனது நண்பர் ராஜனுடன் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ரங்கசமத்தூர் என்ற இடத்தில் சென்றபோது எதிரே தாறுமாறாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ரவிக்குமாரும், ராஜனும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. ராஜன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். பொதுமக்கள் ராஜனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கர்ணன் (20), முத்துராஜ் (20) ஆகியோரும் காயமடைந்தனர். விபத்து குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News