செய்திகள்

உசிலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

Published On 2019-01-13 12:32 GMT   |   Update On 2019-01-13 12:32 GMT
உசிலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது தோட்டத்து கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் விஷால் (வயது15). அவரது நண்பன் ஜெயக்கொடி (13) ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது விஷால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கிணற்றுக்குள் குதித்ததில் ஜெயக்கொடி காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News