செய்திகள்

பொன்னமராவதி அருகே பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

Published On 2019-01-11 12:38 GMT   |   Update On 2019-01-11 12:38 GMT
பொன்னமராவதி அருகே பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பொன்னமராவதி:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா வழிகாட்டுதலின்படி 2018-2019ம் கல்விஆண்டிற்கான 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைப் பயிற்சியானது பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 18 நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்று கொண்டிருக்கும் இப்பயிற்சிக்கு பெற்றோர்கள் பங்களிப்பாக பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவிகளுக்கும் டி-சர்ட்கள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் தாங்கள் பயிற்சி செய்ய எளிமையாக இருப்பதாக 6 முதல் 8 வகுப்புகளில் உள்ள மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பயிற்சியை பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் பார்வையிட்டு மாணவிகளுக்கு டி-சர்ட்கள் வழங்கிய பெற்றோர்களையும் , இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மற்றும் பயிற்சி பொறுப்பாசிரியை சசிகலாதேவி ஆகியோரையும் வாழ்த்தி பாராட்டினார்.

இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம் ,கராத்தே பயிற்சியாளர் குணசேகரன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மீனாள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News