செய்திகள்

படப்பை அருகே மரக்குடோனில் தீ விபத்து

Published On 2019-01-08 15:17 IST   |   Update On 2019-01-08 15:17:00 IST
படப்பை அருகே மரக்குடோனில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

படப்பை அருகே உள்ள செரப்பனஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரக்கட்டையில் பொருட்களை பேக்கிங் செய்யும் நிறுவனம் உள்ளது.

இதற்கு தேவையான மரத்தை அருகில் உள்ள குடோனில் வைத்திருந்தனர். நேற்று இரவு திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதியில் இருந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.

தீவிபத்துக்கான காரணம் குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News