செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளை - குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி கிராம மக்கள் மறியல்

Published On 2019-01-07 11:25 GMT   |   Update On 2019-01-07 11:25 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியில் கடந்த 31-ந் தேதி இரவு வாலிபர்கள் சிலர் புத்தாண்டு ரகளையில் ஈடுபட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே செங்காடு பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற காந்திநகரை சேர்ந்த மாணவர்களை வாலிபர்கள் சிலர் மிரட்டி அனுப்பினர்.

இதுபற்றி அறிந்த காந்திநகர் பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் இன்று காலை மிரட்டல், ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர், மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News