செய்திகள்

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே விபத்து - மாணவி பலி

Published On 2019-01-04 11:54 GMT   |   Update On 2019-01-04 11:54 GMT
சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே விபத்தில் மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் ராஜா. டீ மாஸ்டர். இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது 14). இவர், சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், திடீரென தமிழ்ச்செல்வி மீது மோதியது.

இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கெங்கையம்மன் கோவில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. ஆர்.டி.ஓ. அலுவலக சந்திப்பில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளும் அகற்றப்பட்டன. இதற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.

சாலையை கடக்கும்போது, பலர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். விரைவில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து, விபத்தைத் தடுக்க வேண்டும், என்றனர்.

Tags:    

Similar News