திருமணம் செய்து வைக்காததால் மகன் தாக்கியதில் காயம் அடைந்த தாய் பலி
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் பால கங்கா தெருவை சேர்ந்தவர் தங்கபாய் (64). இவரது மகன் டார்வின் மனோகர். இவருக்கு திருமணமாக வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அவர் வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தாய் தங்கபாயிடம் தகராறு செய்தார்.
அப்போது ஆத்திரம் அடைந்த அவர் தங்கபாயை அடித்து உதைத்து தலையை சுவரில் மோத வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கபாய் மயக்கம் அடைந்தார்.
ஆதம்பாக்கம் போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தங்கபாய் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டார்வின் மனோகர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.