செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை- ராதா கிருஷ்ணன் மீண்டும் ஆஜர்

Published On 2019-01-04 07:52 GMT   |   Update On 2019-01-04 07:52 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தமிழக சுகதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் 2-வது முறையாக இன்றும் ஆஜராகி அவர் விளக்கம் அளித்தார்.


ஆணையத்தில் ஆஜர் ஆவதற்காக காலை 10 மணியளவில் எழிலகத்துக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். காலை 10.20 மணிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.

பிற்பகல் 1 மணி வரை அவர் விசாரணை முடிந்து வெளியில் வரவில்லை. #JayaDeathProbe #TNHealthSecretary #Radhakrishnan
Tags:    

Similar News