செய்திகள்

குளத்தில் நந்தி சிலை வீச்சு-சிவலிங்கத்தை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2019-01-03 09:09 GMT   |   Update On 2019-01-03 09:09 GMT
திருவள்ளூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அஷ்டலிங்கம் சிலையை சேதப்படுத்திவிட்டு நந்தி சிலையை அருகில் உள்ள குளத்தில் வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர், ஜன. 3-

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நுங்கம்பாக் கம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது.

இந்த கோவில் அருகே சர்வதீர்த்த குளக்கரையில் பழமை வாய்ந்த அஷ்ட லிங்கம், நந்தி சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர்.

கடந்த 31-ந் தேதி இரவு அங்கு மர்ம நபர்கள் சிலர் புத்தாண்டு கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறுநாள் அஷ்ட லிங்கத்தின் சிலை உடைக்கப்பட் டிருந்ததுடன், நந்தி சிலையும் மாயமாகி இருந்தது.

இதையடுத்து, அஷ்ட லிங்க சிலையை சேதப் படுத்தியோரை கைது செய்து, மாயமான நந்தி சிலையை மீட்டுத்தர வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் வினோத் கண்ணன் தலைமையில் ஏராளமானோர்திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீரென ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண் கள் உள்பட 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தனர்.

இந்த நிலையில் சிலைகளை சேதப்படுத்தியதாக நுங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன், அய்ய னார் ஆகிய 2 பேரை போலீ சார் கைது செய்தனர். அருண் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது அஷ்டலிங்கம் சிலையை சேதப்படுத்திவிட்டு நந்தி சிலையை அருகில் உள்ள குளத்தில் வீசியதாக தெரிவித்துள்ளனர். குளத்தில் வீசப்பட்ட நந்தி சிலையை கிராம மக்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News