செய்திகள்
வேலூர் ஜெயிலில் குடியாத்தம் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை சின்னாலிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30), கடந்த ஆண்டு இவரது மனைவி வள்ளியை அடித்து கொலை செய்தார்.
இந்த வழக்கில் குடியாத்தம் தாலுகா போலீசார் பிரபுவை கைது செய்ததனர்.பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டது.
இதற்காக ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று பிரபுவுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை சிறைதுறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.
வேலூர் ஜெயிலில் கைதிகள் பலர் உடல் நலம் பாதிக்கபட்டு வருவது தொடர்ச்சியாக நடக்கிறது. இன்று கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.