செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-12-31 10:17 GMT   |   Update On 2018-12-31 10:17 GMT
நாட்டறம்பள்ளி அருகே கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் வரலட்சுமி (வயது21). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

பன்னீர் அதே பகுதியில் வசிக்கும் உறவுக்காரர் மகனுக்கும் மகள் வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால் வரலட்சுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.

இதுகுறித்து தனது தந்தையிடம் பலமுறை முறையிட்டும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி வந்தனர்.

இதனால் மனமுடைந்த வரலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் வி‌ஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வரலட்சுமி இறந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News