செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே விபத்து- வாகனம் மோதி வாலிபர் மரணம்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது வாகனம் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து வருவாய் ஆய்வாளர் ராஜா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகன விபத்தில் பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து வருவாய் ஆய்வாளர் ராஜா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகன விபத்தில் பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.