செய்திகள்

நண்பருடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன்

Published On 2018-12-25 07:27 GMT   |   Update On 2018-12-25 07:27 GMT
நண்பருடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அச்சரப்பாக்கம் மேட்டு காலனியை சேர்ந்த கார்த்தி, அவரது நண்பர் செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அம்பேத்கார் என்பதும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரை கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்து சென்றதையும் ஒப்புக் கொண்டனர்.

மேலும் கார்த்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் அம்பேத்கருடன் சேர்ந்து செவிட்டுபனப்பாக்கத்தில் உள்ள மாமியார் வரதம்மாள் வீட்டில் கொள்ளையடித்ததையும் ஒப்புக் கொண்டார்.

உல்லாச செலவுக்காக பணம் தேவைப்பட்டதால் மாமியார் வீட்டில் கைவரிசை காட்டியதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து கார்த்தி, அம்பேத்கரை போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.

அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் போலீசார் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News