செய்திகள்

பண்ருட்டி அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-12-24 10:03 GMT   |   Update On 2018-12-24 10:03 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அழகப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 38), விவசாயி. இவரது மனைவி அருள்ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாலை பெரியநாயகம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பெரியநாயகம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெரியநாயகம் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News