செய்திகள்

ஓடும் பஸ்சில் இருந்து தவறி வெளியே விழுந்த பெண் பலி

Published On 2018-12-24 05:27 GMT   |   Update On 2018-12-24 05:27 GMT
ஓடும் பஸ்சில் இருந்து தவறி வெளியே விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியை சேர்ந்த நல்லமுத்து என்பவரது மனைவி ‌ஷர்மிளா (வயது 37). இவர் பெருந்துறைையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு தனுஷ்ராம் (9), மோகபிரசாத் (10) என்ற இரு மகன்கள் உள்ளனர். ‌ஷர்மிளாவின் தாயாரான சேலம் மாவட்டம், ஓமலூர், வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தாண்டாக் கவுண்டர் என்பவரது மனைவி செல்வம் (55) பெருந்துறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.

பள்ளியில் தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் தனது பேரன்கள் இருவரையும் தனது ஊருக்கு கூட்டி கொண்டு திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஏறினார்.

இந்த பஸ் பெருந்துறை அடுத்த வெங்கமேடு பகுதியில் சென்ற போது, பஸ்சின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் திடீரென நிலை தடுமாறி பஸ்சில் இருந்து வெளியே தவறி விழுந்தார்.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

உடன் வந்தவர்கள் அவரது வீட்டிற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ‌ஷர்மிளா தனது தாயாரின் உடலைக் கண்டு கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News