செய்திகள்

ஆலங்குளத்தில் மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-12-22 16:12 GMT   |   Update On 2018-12-22 16:12 GMT
ஆலங்குளத்தில் வேலைக்கு செல்லாத மின்வாரிய ஊழியரை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்ததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). இவர் மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வந்தார். குமரி மாவட்டம் தக்கலையில் பணி புரிந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இதனால் அவரை வீட்டில் கண்டித்தனர். 

இதில் மனவேதனை அடைந்த பாலமுருகன் இன்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்த பாலமுருகனுக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News