செய்திகள்

சுசீந்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-12-19 11:21 GMT   |   Update On 2018-12-19 11:21 GMT
சுசீந்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்.ஜி.ஓ. காலனி:

சுசீந்திரம் அடுத்த பொட்டல் காலனியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 37), தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி (36). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் டென்னிசன் வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார்.

அப்போது வீட்டில் இருந்த மனைவி விஜயலெட்சுமி மற்றும் அவரது 2 மகன்களும் மாயமாகி இருந்தனர்.

இதையடுத்து அவர்களை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால் இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News