செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே வேன் மோதி பெண் பலி

Published On 2018-12-19 10:23 GMT   |   Update On 2018-12-19 10:23 GMT
ஜோலார்பேட்டை அருகே வேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அசோகன் (வயது 48). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார்.

அசோகன் தனது குடும்பத்துடன் இன்று காலை ஜோலார்பேட்டைக்கு பைக்கில் சென்றார். ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த வேன் பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் இருந்து 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் 3 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மலர்விழியை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மலர்விழி இறந்தார்.

அசோகன் அவரது மகள் ஆர்த்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News