செய்திகள்

கன்னங்குறிச்சியில் மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை முயற்சி

Published On 2018-12-19 04:20 GMT   |   Update On 2018-12-19 04:20 GMT
சேலம் கன்னங்குறிச்சியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:

சேலம் பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36) அச்சக தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது குடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனைவி கங்காவிடம் கேட்டார். அவர் பணம் கொடுக்காததால் விரக்தி அடைந்த சீனிவாசன் வீட்டில் உள்ள ஒரு அறையில் சென்று கதவை பூட்டி கொண்டார்.

மனைவி மற்றும் உறவினர்கள் கதவை தட்டியும் திறக்காததால் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கதவை திறக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதை பார்த்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூக்கில் தொங்கிய சீனிவாசனுக்க ஆரிஸ் என்ற மகனும், கவுசல்யா என்ற மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News