செய்திகள்

டி.கல்லுப்பட்டியில் ரூ.2¾ லட்சத்துடன் இளம்பெண் குழந்தையுடன் மாயம்

Published On 2018-12-17 12:53 GMT   |   Update On 2018-12-17 12:53 GMT
ரூ.2¾ லட்சத்துடன் இளம்பெண் குழந்தையுடன் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி ஐ.ஓ.பி. நகரைச் சேர்ந்தவர் மதுமோகன்ராஜ் (வயது27). தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு சுஜாதா (24) என்ற மனைவியும், ஜவான் நாராயணன் என்ற 10 மாத கைக்குழந்தையும் உள்ளது.

சம்பவத்தன்று சுஜாதா தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த மதுமோகன்ராஜ் மற்றும் உறவினர்கள் இருவரையும் பல இடங்களில் தேடினர். ஆனால் பலனில்லை.

இந்த நிலையில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் சுஜாதா மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News