செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - தஞ்சையில் 40 பேர் கைது

Published On 2018-12-17 09:05 GMT   |   Update On 2018-12-17 09:05 GMT
தஞ்சையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். #Sterlite
தஞ்சாவூர்:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 40 பேரை தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கைது செய்தனர். #Sterlite

Tags:    

Similar News