செய்திகள்
ஆலங்குடியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குடி:
கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆலங்குடி வட்டஞ்கச்சேரி திடலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி நகர செயலாளர் வரவேற்று பேசினார்.
திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உடையப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரி குமாரவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும், விவசாய கடன்கள் அனைத்தையும் முற்றிலும் ரத்து செய்திட வேண்டும், பயிர் காப்பீடு காலக்கெடுவை நீடித்து அரசு பயிர் இன்சூரன்ஸ் செய்திட வேண்டும், தென்னை ஒன்றுக்கு ரூ.20,000 ஆயிரம் வழங்கவும், மா, பலா, வாழை, சவுக்கு ஆகியவற்றிற்கு உரிய நிவரணம் மற்றும் இதர மரத்திற்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் 6 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சுசீலா, சிவகுமார், பாலசுப்பிர மணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ரெகுநாதன், ஆறுமுகம், பழனி வேலு, மதியழகன், ஸ்டெல்லா மேரி, நாடி யம்மை, இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டெல்லாமேரி நன்றி கூறினார்.