செய்திகள்
அரும்பார்த்தபுரத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
அரும்பார்த்தபுரத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்த புரம் சண்முகம் நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே ராமச்சந்திரன் சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் தனது மனைவி- மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென நள்ளிரவில் ராமச்சந்திரனை காணவில்லை.
இதையடுத்து அவரது மனைவி பக்கத்து அறையில் சென்று பார்த்த போது அங்கு கணவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.