செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 22 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த தொம்பரை (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட 22 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த தொம்பரை (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட 22 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.