செய்திகள்

கல்லூரி மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2018-12-12 10:29 GMT   |   Update On 2018-12-12 10:29 GMT
தூத்துக்குடியில் செல்போனில் படம் எடுத்து மிரட்டி கல்லூரி மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் லாரி டிரைவர். இவரது 17 வயது மகள் தூத்துக்குடி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் மாணவியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து மகளிடம் கேட்டார்.

அப்போது மாணவி கூறும் போது, பள்ளியில் படிக்கும் போது ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவரான புதுக்கோட்டை மேல கூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33) என்பவர் என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார். மேலும் செல்போன் படத்தை காட்டி மிரட்டி கடந்த 5. 4. 2018 அன்று தன்னை கற்பழித்தார். இதனை வெளியில் கூறினால் செல்போன் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாகவும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி பல முறை கற்பழித்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்ததாக ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News