அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடையில் 3-வது முறையாக கொள்ளை
அவனியாபுரம்:
அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் உள்ளது. நேற்று நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு 36 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
நள்ளிரவில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் டாஸ்மாக் கடையின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேற்பார்வையாளர் கருப்பையா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
எம்.எம்.சி. காலனி பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையில் 7 மாதத்துக்கு முன்பு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், கண்காணிப்பு கேமிரா ஆகியவை கொள்ளைபோனது.
அதன் பிறகு3 மாதத்துக்கு முன்பு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டிகள் திருடுபோனது. இப்போது 3-வது முறையாக இந்த டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.