செய்திகள்

முதுகுளத்தூர் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை

Published On 2018-12-09 13:08 GMT   |   Update On 2018-12-09 13:08 GMT
முதுகுளத்தூர் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை

முதுகுளத்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாத்திருக்கையை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் குருவம்மாள் (வயது 34)/ இவர் கொண்டுலாவி கிராமம் அருகே முகம், கை, கால்களில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து பேரையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குருவம்மாள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. கள்ளத் தொடர்பு விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News