செய்திகள்

கொடுமுடி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2018-12-08 14:57 GMT   |   Update On 2018-12-08 14:57 GMT
கொடுமுடி அருகே லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே பலியானார்.

கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு அடுத்த வடுகனூரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). இவரது மனைவி மீனாட்சி (55).

நேற்று துரைசாமி தனது மனைவி மீனாட்சியுடன் செம்பாகவுண்டனூரில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அவர்கள் மாலையில் மோட்டார் சைக்கிளில் ஈரோடு-கருர் மெயின் ரோட்டில் வெள்ளோட்டம் பரப்பு அருகே எல்லையூர் பிரிவில் வந்து கொண்டிருந்தனர்.

வீட்டுக்கு செல்வதற்காக திரும்பும்போது கரூர்- ஈரோடு மெயின் ரோட்டில் எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே மனைவி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். துரைசாமி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News