செய்திகள்
திருச்செந்தூர் அருகே சுவற்றில் கார் மோதி விபத்து: டிரைவர் பலி
திருச்செந்தூர் அருகே சுவற்றில் கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அம்மன்புரம் கானா விளையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்துக்குமார் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவர் கடந்த 1-ந் தேதி பயணிகளை ஏற்றி கொண்டு உடன்குடிக்கு சவாரி சென்றார். பின்னர் சவாரி முடித்து மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
அவர் காயாமொழி அருகே வந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள சுவற்றில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.