செய்திகள்

குளியல் அறையில் மயங்கி விழுந்த இளம்பெண் பலி

Published On 2018-12-06 17:51 IST   |   Update On 2018-12-06 17:51:00 IST
நாகர்கோவில் அருகே உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட இளம்பெண் குளியல் அறையில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஜி.ஓ. காலனி:

நாகர்கோவில் அருகே உள்ள கீழஉடையப்பன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி அனுராணி (வயது 35). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

அனுராணி உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்கச் சென்றார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த பால்துரை சத்தம் போட்டு அலறினார்.

அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அனுராணியை மீட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனுராணிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. #tamilnews
Tags:    

Similar News