செய்திகள்
அரக்கோணம் அருகே சாராயம் விற்றவர் கைது
அரக்கோணம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அந்த பகுதியில் ஆய்வு செய்தார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறு கவர்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் அங்கு விற்பனை செய்தவர் மற்றும் வாங்க வந்தவர்கள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவாஜி (55) என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.