செய்திகள்

திருப்பத்தூரில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2018-12-03 12:13 GMT   |   Update On 2018-12-03 12:13 GMT
குடிபோதையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூரை சேர்ந்தவர் சந்திரன். 108 ஆம்புலன் டிரைவர். இவர் நேற்று திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ்சில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் கும்பல் சந்திரனிடம் வீண்தகராறு செய்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த சந்திரன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவரது தரப்பில் மருத்துவ அலுவலர் செல்வகுமார் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பத்தூர் சிவராஜ்நகரை சேர்ந்த கணேசன் (வயது 25). என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தன்ராஜ் மற்றும் ஜெயகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News