செய்திகள்
16 வயது சிறுமி பலாத்காரம்- வாலிபர் மீது வழக்கு
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை அனுப்பானடி திருமலைநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திருமண ஆசைகாட்டி, கடந்த 30-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காளீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.