செய்திகள்

வேனில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்- டிரைவர் உள்பட 2 பேர் சிக்கினர்

Published On 2018-11-30 20:42 IST   |   Update On 2018-11-30 20:42:00 IST
லால்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனில் கடத்தி செல்லப்பட்ட 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
லால்குடி:

திருச்சி மாவட்டம்லால் குடியில் நேற்று மாலையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் லால்குடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 22 பெட்டிகள் மது பாட்டில்கள் இருந்தது. உடனே இது குறித்து வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (25) , வேன் டிரைவர் தஞ்சாவூரைசேர்ந்த அருள் ஆராக்கியதாஸ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் லால்குடி பூவானுரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி அதை தஞ்சாவூருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. 

உடனே போலீசார் 22 மதுபாட்டில்கள் பெட்டிகளையும், வேனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிடிப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ 1 லட்சத்து 5 ஆயிரமாகும். 

கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் அவர்கள் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News