செய்திகள்

கடவூர் பகுதியில் நிவாரண பொருட்கள் வினியோகம்

Published On 2018-11-29 18:20 GMT   |   Update On 2018-11-29 18:20 GMT
கடவூர் ஒன்றியத்தில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.
தரகம்பட்டி:

கடவூர் ஒன்றியத்தில் தரகம்பட்டி, மாவத்தூர், பாலவிடுதி, கடவூர், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.

கடவூர் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையில், மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, குடம் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் வெங்கட் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News