செய்திகள்

அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி

Published On 2018-11-28 23:27 IST   |   Update On 2018-11-28 23:27:00 IST
கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கரூர்:

கரூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் எம்.எஸ்.தேவசகாயம் கலைகள்-கைவினைகள் மையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி கரூர் ஜவகர்பஜார் அருகேயுள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். 1-3, 4-5, 6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனிதனியாக போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இயற்கை காட்சிகள், தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தினர். ஓவிய ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், ஓவிய போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கரூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு வரவேற்று பேசினார். விழாவிற்கு கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் தலைமை தாங்கி, ஓவிய போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதில் நாணயவியல்-கல்வெட்டியல் ஆய்வாளர் ராஜூ, பேராசிரியர் மாரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும், கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழங்கால உலோக பொருட்கள், மரசிலைகள் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவற்றின் வரலாறு, தொன்மை குறித்து அருங்காட்சியக பணியாளர்கள் விளக்கி கூறினார்கள்.
Tags:    

Similar News