செய்திகள்

தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2018-11-28 17:12 GMT   |   Update On 2018-11-28 17:12 GMT
தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி:

அரிய வகை கடல் உயிரினமான கடல் அட்டைகள் மருந்து வகைக்காக பயன்படுத்தப்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் இதனை சட்டவிரோதமாக கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கடல் அட்டைகள்  கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மரைன் போலீசார் நேற்று இரவு திரேஸ்புரம் முத்திரையர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது படகில் இருந்து சாக்கு மூட்டைகள் ஒரு  ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் ஆய்வு செய்த போது 160 கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த வேன் டிரைவரான மகேந்திரன் (வயது 36) என்பரை கைது செய்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் இன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் இன்று மரைன் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் உலர்த்தி வைக்கப்பட்ட 250 கிலோ அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தியவர்கள் யார் ? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் நேற்று, இன்று தொடர்ந்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News