செய்திகள்

ஓசூரில் நகர திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2018-11-28 15:11 GMT   |   Update On 2018-11-28 15:11 GMT
ஓசூரில் சட்ட விரோத லாட்டரி விற்பனை மற்றும் கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நகர தி.மு.க. சார்பில், சட்ட விரோத லாட்டரி விற்பனை மற்றும் கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஓசூர் நகராட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஓசூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். 

நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். மற்றும் வேப்பனபள்ளி எம்.எல்.ஏ. முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள்.
Tags:    

Similar News