செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே விபத்து - என்ஜினீயர் பலி

Published On 2018-11-27 06:11 GMT   |   Update On 2018-11-27 06:11 GMT
ஊத்துக்கோட்டை அருகே விபத்தில் சென்னை என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

சென்னை கிண்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தவர் கணேஷ் குமார் (வயது 29). இவரது சொந்த ஊர் கமுதி ஆகும்.

இவர் உடன் வேலை பார்க்கும் என்ஜினீயர் விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையை அடுத்த கோனே பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு சென்றார். அங்குள்ள அருவியில் இருவரும் குளித்து விட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீர் என்று மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

இதில் கணேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். விக்னேஷ் லேசான காயத்து டன் உயிர் தப்பினார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News