செய்திகள்

திருமங்கலத்தில் மர்ம காய்ச்சலுக்கு தலைமை ஆசிரியர் பலி

Published On 2018-11-26 17:32 GMT   |   Update On 2018-11-26 17:32 GMT
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பேரையூர்:

திருமங்கலம் காமராஜர் வடபகுதி கற்பகம் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 2 வாரமாக இவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து ராதாகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரது நிலைமை மோசமடைந்தது.

உடனே அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் ராதாகிருஷ்ணனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அதில் பலன் ஏற்படாமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

திருமங்கலம் காமராஜர் பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே திருமங்கலம் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்தப்பகுதியில் முகாமிட்டு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News