செய்திகள்

கொடைக்கானல் பகுதியில் கடும் பனிமூட்டத்துடன் மிதமான சாரல் மழை

Published On 2018-11-23 11:02 GMT   |   Update On 2018-11-23 11:02 GMT
கொடைக்கானல் பகுதியில் கடும் பனிமூட்டத்துடன் மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தும் மின்கம்பங்கள் சாய்ந்தும், விவசாயநிலங்கள் முற்றிலும் அழிந்தும் , கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை கீழ்மலை கிராமங்கள் முழுவதும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மீளாத நிலையில் இன்று கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடும் பனிமூட்டம் நிலவியதால் சாலைகளில் சென்ற இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு தவழ்ந்து சென்றன. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளும் அறைக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்,சிறு வியாபாரிகளின் வணிகமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.

Tags:    

Similar News