செய்திகள்

மூர்மார்க்கெட் கடைகளில் 794 செல்போன்கள் பறிமுதல்- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Published On 2018-11-21 09:07 GMT   |   Update On 2018-11-21 09:07 GMT
மூர்மார்க்கெட் கடைகளில் ஆவணம் இன்றியும் பாதிவிலைக்கு விற்பனை செய்த 794 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:

சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் ஏராளமான செல்போன் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு விலை உயர்ந்த புதிய செல்போன்கள், பழைய செல்போன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், உரிய ஆவணங்கள் இன்றியும், பழைய செல்போன்கள் புதிய செல்போன்களாக மாற்றி விற்கப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல கடைகளில் உரிய ஆவணம், பில் இல்லாமல் செல்போன்கள் விற்கப்படுவது தெரியவந்தது.

அவர்களிடம் இருக்கும் பழை செல்போன்களை யாரிடம் இருந்து வாங்கப்பட்டது. என்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

இதைத் தொடர்ந்து 794 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பற்றி கடை உரிமையாளர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொள்ளை கும்பல் தாங்கள் பறிக்கும் செல்போன்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே கடைகளில் திருட்டு செல்போன்கள் வாங்கப்படுகிறதா? அவை எவ்வாறு புதிய செல்போனாக மாற்றப்படுகிறது. என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News