செய்யாறு அருகே விவசாயி அடித்து கொலை
செய்யாறு:
செய்யாறு அருகே வடதண்டலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 35). விவசாயி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு விநாயக மூர்த்தி அருகே உள்ள அவரது விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நிலத்திலே படுத்து தூங்கி இருக்கலாம் என்று குடும்பத்தினர் கருதினர்.
இந்நிலையில் இன்று காலை விநாயக மூர்த்தியின் தந்தை முனுசாமி விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு டிராக்டர் மட்டும் இருந்தது. விநாயமூர்த்தியை காணவில்லை. பக்கத்து நிலத்திற்கு சென்று பார்த்த போது அங்கு விநாயக மூர்த்தி இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த முனுசாமி இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பார்வையிட்டனர். விநாயகமூர்த்தி உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன. மேலும் அவரது உடல் அருகே ரத்த கரையுடன் கடப்பாறை இருந்தை கண்டு பிடித்தனர்.
விநாயகமூர்த்தியை யாரோ அடித்து கொலை செய்து விட்டு பக்கத்து நிலத்தில் வீசி சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார் செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விநாயகமூர்த்தியை முன் விரோத காரணமாக கொலை செய்யபட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி அடித்து கொலை செய்யபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.