செய்திகள்
நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மறுசீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja
கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்ற கலெக்டர் அறிவித்துள்ளார்.
மேலும் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையாமல் இருந்தால், அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை விடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையாமல் இருந்தால், அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை விடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.