செய்திகள்

சிவகாசி தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் - அதிகாரி அறிவிப்பு

Published On 2018-11-17 11:37 GMT   |   Update On 2018-11-17 11:37 GMT
சிவகாசி தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை:

தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவோர் ரெயில் நிலையம் மற்றும் அங்கீகார மையங்களில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.

இந்த நிலையில் ரெயில் டிக்கெட்டுகளை இனிமேல் தபால் நிலையங்களிலும் முன்பதிவு செய்யலாம். அதற்கான வசதியை மதுரை ரெயில்வே கோட்டம் சிவகாசி தபால் நிலையத்தில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

இங்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மதுரை கோட்டம் முழுவதும் அமல் படுத்தப்படும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் ரெயில்வே துறையும், அஞ்சல் துறையும் ஒருங்கிணைந்து சிவகாசி தபால் நிலையத்தில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டத்தை அமல் படுத்தி உள்ளது. இதனை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News